பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து சின்னத்திரை எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். அண்மையில் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ஜோதிடர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனைத்தொடர்ந்து ஜோதிடர்கள் தரப்பில் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த வக்கீல் நோட்டீஸிற்கு தக்க பதிலை மாரிமுத்து அளிக்காத பட்சத்தில் அவர் மீது குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாரிமுத்து தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளிவராததால் தற்போது 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் ஒன்றாக இணந்து நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
எதிர்நீச்சல் தொடரின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் மாரிமுத்துவின் நடிப்பும் ஒன்று. எனவே, அவர் மீது தற்போது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.




