10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே கிழக்கு வாசல் தொடர் உருவாகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், ராதிகா, ரேஷ்மா, அஸ்வினி, சஞ்சீவ் வெங்கட், அருண்குமார் ராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த சீரியலில் நடிக்க கமிட்டாகியிருந்தனர். நடிகர் சஞ்சீவ் வெங்க்ட தான் ஹீரோவாக நடிக்க இருந்தார். சீரியலுக்கான ஷூட்டிங்கும் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.
இந்நிலையில், நடிகர் சஞ்சீவ் கிழக்கு வாசல் தொடரிலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், 'நான் கிழக்கு வாசல் தொடரிலிருந்து அதிகாரபூர்வமாக விலகிவிட்டேன் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். கிழக்கு வாசல் தொடரில் முத்து கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. ராதிகா சரத்குமார் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரை மிஸ் செய்கிறேன். அடுத்த ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன் நன்றி' என்று அறிவித்திருந்தார். இதனால், சஞ்சீவின் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.




