விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
சின்னத்திரையில் சீரியல்களில் ஒரு காலத்தில் பேவரைட் ஹீரோவாக வலம் வந்த பிரஜின் பத்மநாபன் தற்போது வெள்ளித்திரை படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். திரைப்பட வாய்ப்புக்காக 'வைதேகி காத்திருந்தாள்' தொடரிலிருந்து சில எபிசோடுகளுடன் விலகிவிட்டார். பிரஜின் நடிப்பில் டி-3 திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் 'ஹையானா', 'நினைவெல்லாம் நீயடா' என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சினிமா என்ட்ரிக்கு பிறகு சின்னத்திரை பக்கம் மீண்டும் வரமாட்டார் என பிரஜினின் ரசிகர்கள் கவலையுற்றிருந்த நிலையில், அவர் தற்போது ஜீ தமிழ் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். தவமாய் தவமிருந்து என்கிற தொடரில் பிரஜின் கடவுள் முருகனாக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதன் புரோமோவை பார்க்கும் போது சீடன் படத்தில் தனுஷின் சரவணன் கதாபாத்திரத்தை காப்பி அடித்திருப்பது போல் உள்ளது.