பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சின்னத்திரை இயக்குநர் பிரவீன் பென்னட் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சீரியல் நடிகர்களுக்கு கிடைக்கும் புகழ் இயக்குநர்களுக்கு கிடைப்பதில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், 'சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் அதன் வெற்றிக்கு முதல் காரணம் இயக்குநர்கள் தான். அதற்கு பிறகுதான் நடிகர்கள். சின்னத்திரையை பொறுத்தமட்டில் சீரியல் இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுப்பதில்லை. அதேப்போல் சீரியல் நடிகர்/நடிகைகள் பேட்டி கொடுத்தால் ஊடகங்களில் வைரலாகிறது. ஆனால், இயக்குநர் பேட்டி கொடுத்தால் மக்கள் அதை புறக்கணிக்கின்றனர். இந்த நிலை எனக்கு வருத்தமளிக்கிறது' என அதில் பேசியுள்ளார்.




