மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

சீரியல்களில் 'ரோஜா' தொடருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மற்ற தொடர்களை போல் அல்லாமல் பாட்டு, ரொமான்ஸ், சண்டை என சினிமாவிற்கான மசாலா அம்சங்களுடன் சீரியலில் வித்தியாசமான முயற்சிகளை செய்து நேயர்களிடமும் சில நேரங்களில் வரவேற்பையும் சில நேரங்களில் விமர்சனங்களையும் பெற்றிருந்தது.
இந்நிலையில், ரோஜா தொடரானது தற்போது க்ளைமாக்ஸை எட்டியுள்ளது. இந்த செய்தியை அந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வரும் சிபு சூரியன் மற்றும் ப்ரியங்கா நல்காரி வெளியிட்டுள்ளனர். சிபு சூரியன், 'அதிகமாக ரசிக்கப்பட்ட அர்ஜூன் கதாபாத்திரத்தை என்னை நம்பி எனக்களித்த சரிகமா நிறுவனத்துக்கு நன்றி. ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ப்ரியங்கா நல்காரியும், 'என் வாழ்க்கையில 4 வருஷத்துக்கும் மேலான இந்த பயணத்தை மறக்கவே முடியாது. தமிழ் தெரியாம இங்க வந்த என்னை எல்லோரும் உங்க வீட்டு பெண்ணா ஏத்துக்கிட்டீங்க.உங்களோட இந்த அன்புக்கு நான் என்ன செய்யப்போறேன்னு தெரியல' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த ரோஜா தொடரானது கடந்த 4 வருடங்களில் 1200க்கும் மேலான எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டதால் ரசிகர்கள் பலரும் ரோஜா மற்றும் அர்ஜூன் கதாபாத்திரத்தை இனி நாங்கள் அதிகமாக மிஸ் செய்வோம் என வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.




