பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

சீரியல்களில் 'ரோஜா' தொடருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மற்ற தொடர்களை போல் அல்லாமல் பாட்டு, ரொமான்ஸ், சண்டை என சினிமாவிற்கான மசாலா அம்சங்களுடன் சீரியலில் வித்தியாசமான முயற்சிகளை செய்து நேயர்களிடமும் சில நேரங்களில் வரவேற்பையும் சில நேரங்களில் விமர்சனங்களையும் பெற்றிருந்தது.
இந்நிலையில், ரோஜா தொடரானது தற்போது க்ளைமாக்ஸை எட்டியுள்ளது. இந்த செய்தியை அந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வரும் சிபு சூரியன் மற்றும் ப்ரியங்கா நல்காரி வெளியிட்டுள்ளனர். சிபு சூரியன், 'அதிகமாக ரசிக்கப்பட்ட அர்ஜூன் கதாபாத்திரத்தை என்னை நம்பி எனக்களித்த சரிகமா நிறுவனத்துக்கு நன்றி. ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ப்ரியங்கா நல்காரியும், 'என் வாழ்க்கையில 4 வருஷத்துக்கும் மேலான இந்த பயணத்தை மறக்கவே முடியாது. தமிழ் தெரியாம இங்க வந்த என்னை எல்லோரும் உங்க வீட்டு பெண்ணா ஏத்துக்கிட்டீங்க.உங்களோட இந்த அன்புக்கு நான் என்ன செய்யப்போறேன்னு தெரியல' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த ரோஜா தொடரானது கடந்த 4 வருடங்களில் 1200க்கும் மேலான எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டதால் ரசிகர்கள் பலரும் ரோஜா மற்றும் அர்ஜூன் கதாபாத்திரத்தை இனி நாங்கள் அதிகமாக மிஸ் செய்வோம் என வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.