'பெத்தி' படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி | 'திரிஷ்யம்' நடிகை புகாரின் பேரில் சக நடிகை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு | கொச்சியில் நடைபெற்ற ஆஷா சரத் இளைய மகள் நிச்சயதார்த்தம் | பிளாஸ்ட் : 25 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கருப்பு : வெளியீட்டிற்கு முன்பு 'டெபிசிட்', பின்பு 'பிராபிட்' | 'மோலிவுட் டைம்ஸ்' படத்தில் மீண்டும் அசத்துவார்களா பிரேமலு பிரண்ட்ஸ்? | ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம் | ரசிகர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் : பூஜா ஹெக்டே | ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில் |

கேரளாவை சேர்ந்த வித்யா மோகன் தமிழில் சில படங்களில் நடித்தார். வெள்ளித்திரை அவருக்கு கைகொடுக்காத நிலையில் சின்னத்திரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிட் சீரியல்களில் லீட் ரோல்களில் நடித்து கலக்கி வருகிறார். தமிழில் இவர் நடித்த 'வள்ளி' நெடுந்தொடர் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது 'அபியும் நானும்' தொடரில் நடித்து வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய வித்யா மோகன், இனி தாலியை கழட்டி விட்டு நடிக்கமாட்டேன் என ஸ்ட்ரிக்டாக கண்டிஷன் போட்டுள்ளதாக கூறியிருக்கிறார். 'என் தாலி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு அவர் போட்ட முதல் செயின். அதை கழட்டி வைத்துவிட்டு நடிக்க மாட்டேன். அப்படியொரு நிலை வந்தால் அந்த புராஜெக்டையே வேண்டாம் என கூறிவிடுவேன்' என கூறுகிறார். இந்த பேட்டியை பார்க்கும் பலரும் வித்யா மோகனுக்கு தாலி மீது இருக்கும் செண்டிமெண்டையும் கலாச்சாரத்தை மதிக்கும் அவரது குணத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.




