ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் - மஹாலெட்சுமி திருமணம் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வைரல் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் வனிதாவின் பதிவும் ரவீந்தரை சீண்டி பழிவாங்கும் வகையில் இருப்பதாக பலரும் பேசி வந்தனர். காரணம், வனிதா பீட்டர் பவுலை திருமணம் செய்த போது சமூக ஊடகங்களில் அவருக்கெதிரான விமர்சனங்கள் பரவலாக எழுந்தது. அப்போது ரவீந்தரும் தன் பங்கிற்கு வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது.
தற்போது ரவீந்தர் திருமணமும் சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், வனிதா 'கர்மா ஒரு பூமராங்' என பதிவிட்டு ரவீந்தருக்கு பதிலடி கொடுத்தார். அந்த டுவீட்டானது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அண்மையில் அது குறித்த விளக்கத்தை வனிதா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வனிதா அந்த பேட்டியில், 'உண்மையில் நான் மனதார ரவீந்தர் - மஹாலெட்சுமி திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அந்த டுவீட் நான் எதார்த்தமாக போட்டது. கர்மா யாரையும் சும்மாவிடாது என்பதை நான் என் வாழ்விலேயே பார்த்திருக்கிறேன். அவர்களை மட்டும் குறிப்பிட்டு நான் போடவில்லை. என் வாழ்வில் அப்போது நான்கைந்து விஷயங்கள் நடந்தன. அதனால் அந்த பதிவை போட்டேன். ஆனால், அது அவர்களுக்கும் பொருந்தும். ரவீந்தரின் மாஸ்டர் பிளான் எனக்கு தெரியும். என்னிடம் வேண்டாம்' என கூறியுள்ளார்.




