சீரியல் நடிகை சஹானா நீண்ட நாட்களாக அபிஷேக் ராஜா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து அடிக்கடி ஊர்சுற்றி சில ரொமாண்டிக்கான போஸ்ட்டுகளை பதிவிட்டுள்ளனர். சஹானாவும் தற்போது சீரியல்களில் பிசியாக நடித்து வரும் நிலையில், இருவருக்கும் எப்போது தான் திருமணம் என ரசிகர்களே கேட்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், சஹானா - அபிஷேக் ராஜா நிச்சயதார்த்தம் உற்றார் உறவினர்கள் புடைசூழ கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை சஹானா வெளியிட, தற்போது அவை வைரலாகி வருகின்றன. சஹானா - அபிஷேக் ராஜா ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.