பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சின்னத்திரை பிரபலங்களான நவீன் குமார் - கண்மணி சேகரின் நிச்சயதார்த்த வைபவம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கலர்ஸ் தமிழின் 'இதயத்தை திருடாதே' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன் குமார். இவருக்கும் அதே தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ஹீமா பிந்துவுக்கு காதல் என இணையத்தில் அடிக்கடி கிசுகிசுக்கள் வெளி வந்தது. ஆனால், இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்றே சில நேர்காணல்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நவீன் குமார் செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகரனை காதலிப்பதாக அறிவித்தார். இதனையடுத்து இந்த காதல் ஜோடிகளின் கதை பலவாறாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது. தற்போது இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நவீன் மற்றும் கண்மணி என இருவருக்கும் ரசிகர்கள் அதிகம் என்பதால் இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சக நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.




