ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சின்னத்திரையில் செல்ல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. தற்போது சினிமாவில் நடிப்பது குறித்து கவனம் செலுத்தி வரும் டிடி, சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக மீண்டும் சின்னத்திரை வந்துள்ளார். எப்போதும் குழந்தை தனத்துடன் ஜாலியாக போஸ்ட் போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் டிடி, சமீபத்தில் வீல்சேரில் இருப்பது போல் போட்டை ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து அவருக்கு ஆக்ஸிடண்ட் ஆகிவிட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதற்கு விளக்கமளித்துள்ள டிடி, 'எனக்கு முடக்குவாதம் இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியாது அதற்காக தான் வீல் சேர் பயன்படுத்தினேன். ஆனால் இந்த முடக்குவாதத்தால், எனக்குள் இருக்கும் குழந்தை தன்மையை ஒருபோதும் தடுக்க முடியாது' என கூறியுள்ளார்.
ஒருபுறம் டிடிக்கு முடக்குவாதம் என்று தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், அதேசமயம் டிடி அதை பாசிட்டிவாக அணுகுவதை கண்டு பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
டிடி தற்போது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' பிக்பாஸ் வருணின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.