பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சமந்தா-நாகசைதன்யா நட்சத்திர தம்பதியினர் நேற்று தாங்கள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக கூட்டாக அறிவித்தனர். இந்த செய்தி தமிழ், தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த பிரிவிற்கான காரணத்தை அவர்கள் இருவருமே தெரிவிக்கவில்லை. அதோடு கடந்த மூன்று மாதங்களாகவே நாகசைதன்யாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் சமந்தா, தொடர்ந்து சினிமாவில் தான் கவனம் செலுத்தும் நோக்கில் சினிமா, வெப் சீரிஸ் என்று நடிப்பில் கவனத்தை திருப்பியுள்ளார். அதோடு, நாகசைதன்யாவை பிரிவது என்பது பல மாதங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்பதால் நேற்று இந்த செய்தியை வெளியிட்டது சமந்தாவிற்கு பெரிதாக மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால் தொடர்ந்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்தநிலையில், நாகசைதன்யாவை விவாகரத்து செய்ய தயாராகிவிட்ட சமந்தாவிற்கு அவரது சார்பில் ரூ.200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்ததாகவும் அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு நான் சினிமாவில் தனித்து வந்து போராடி வெற்றி பெற்றவள். அதனால் என்னால் சுயமாக சம்பாதித்து வாழ முடியும் என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.




