சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் | ஓடிடியில் வெளியாகும் சன்னி லியோன் படம் | ராமராஜன், நளினி பிரிவுக்கு நான் காரணமில்லை: சேது அபிதா திடீர் விளக்கம் | பிளாஷ்பேக்: 'உயிருள்ளவரை உஷா' கங்காவின் சோக கதை | அடுத்தடுத்து 'பயோபிக்' படங்களில் தனுஷ் | பிளாஷ்பேக்: 5 படங்களை இயக்கிய ஆடியோகிராபர் | பிரபாஸுக்கும் ஜோடி பவன் கல்யாணுக்கும் ஜோடி ; அறிமுக நடிகைக்கு ஜாக்பாட் | அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் யார் ? | 'பார்சி 2' வெப் சீரிஸ் ஆரம்பம் : இயக்குனர்கள் தகவல் | பொருளாதார சிக்கல்களை சமாளிக்க 'லியோ' பெரிய அளவில் உதவியது ; கவுதம் மேனன் |

துப்பறிவாளன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்திலும் விஷாலும், மிஷ்கினும் இணைந்தார்கள். ஆனால் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தானே துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கப் போவதாக கூறி வருகிறார் விஷால்.
இந்தநிலையில் ஏற்கனவே தான் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா ஆகியோரை வைத்து இயக்கி வரும் மிஷ்கின் தான் அளித்த ஒரு பேட்டியில் விஷால் குறித்து கூறியுள்ளார். அதில், விஷால் எனது தம்பி மாதிரி என்று உருகியுள்ளார். மேலும், துப்பறிவாளன் படத்திற்கு பாட்டே வேண்டாம் என்று நான் சொன்னபோது என்னை புரிந்து கொண்டு அதற்கு சம்மதம் சொன்ன மனிதன் விஷால். நல்ல உழைப்பாளியான விஷால் இன்னும் 40 வருசம் சினிமாவில் இருப்பான். நான் அவன் மேல் வைத்த அன்பையும், என்மேல் அவன் வைத்த அன்மையும் மறக்க முடியாது. என்றாலும் நாங்கள் இருவருமே விடாகொண்டன் கொடாக்கொண்டனாக இருப்பதால்தான் எங்களது கூட்டணி முறிந்து விட்டது. இனிமேல் நாங்கள் இணையமாட்டோம். ஆனபோதும் விஷால் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மிஷ்கின்.




