ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

இந்திய சினிமாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பாடும் நிலாவான பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வந்த நிலையில் நோய்க்கு பிந்தைய பாதிப்பால் மரணம் அடைந்தார். அவர் மறைந்து இன்றோடு ஓராண்டாகிவிட்ட நிலையில் திரையுலகினர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், ‛‛ஒருவர் எதில் மாத்திரம் உள்ளப்பூர்வமாக ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறாரோ அதுவாகவே மாறிவிடுகிறார். என் அன்னய்யா பாலு பாடுவதற்கெனவே தன் ஆயுளைத் தத்தம் செய்தவர். அதனால் தான் குரலாகவே மாறிவிட்டார். சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்.




