காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடையும் எனத் தெரிகிறது. இப்படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில்தான் சூர்யா நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதில் சில மாற்றங்கள் நடக்கும் எனத் தெரிகிறது.
சூரி, விஜய் சேதுபதி நடிக்க வெற்றிமாறன் இயக்கி வரும் 'விடுதலை' படத்தின் மொத்த வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் 'வாடிவாசல்' பக்கம் வர உள்ளாராம் வெற்றிமாறன். அதற்குள்ள சிவா இயக்கத்தில் எப்போதோ அறிவிக்கப்பட்ட படத்தை மீண்டும் துவங்கும் முடிவில் உள்ளாராம் சூர்யா.
ரஜினிகாந்த் நடிக்க சிவா இயக்கி வரும் 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் இந்த மாதத்திற்குள் முடிவடைய உள்ளது. நவம்பர் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது. இதற்கடுத்த படமாக சூர்யா படத்தை சிவா இயக்குவார் என்கிறார்கள்.
ரஜினிகாந்த்திற்காக இரண்டு முறை தனது படங்களை தள்ளி வைத்துள்ளார் சூர்யா. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்த போது அவர் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' படத்தை இயக்கப் போய்விட்டார். சிவா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்த போது அவர் 'அண்ணாத்த' படத்தை இயக்கப் போய்விட்டார்.




