காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
தெலுங்கு பட உலகில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக எழுந்த புகாரில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி 30 பேரை கைது செய்தனர். போதைப்பொருள் வழக்கில் பல கோடிகள் கைமாறியது தெரிய வந்ததால் அமலாக்கத்துறையும் தனியாக விசாரணை நடத்த தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது.
நடிகைகள் ரகுல்பிரீத் சிங், சார்மி, தெலுங்கு நடிகர்கள் ராணா, ரவிதேஜா, இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நடிகர் நவ்தீப்புக்கும் சம்மன் அனுப்பி இருந்ததால் அவரும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜரானார்.
நவ்தீபிடம் அமுலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் கேள்விகளுக்கு நவ்தீப் மழுப்பலான பதில்களை சொன்னதாகவும், அதிகாரிகள் துருவி துருவி கேள்வி கேட்டபோது என்னை ஒரு கொலை குற்றவாளி போன்று கேள்வி கேட்கிறீர்கள் என்று நவ்தீப் கோபப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பின்னர் அவரிடம் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை கொடுத்து அதற்கு பதில் எழுதி அனுப்புமாறு கூறியதுடன், மறு விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பியதாக தெரிகிறது.
தெலுங்கில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நவ்தீப், தமிழில் அறிந்தும் அறியாமலும், இளவட்டம், ஏகன், நெஞ்சில் சில் சில், சொல்ல சொல்ல இனிக்கும், அஆஇஈ, இது என்ன மாயம் படங்களில் நடித்துள்ளார்.