நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
மலையாள திரையுலகில் இருபது வருடங்களுக்கு முன்பு முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள் தான் மஞ்சுவாரியர், கீது மோகன்தாஸ், மற்றும் சம்யுக்தா வர்மா. இதில் கீது மோகன்தாஸ் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியை திருமணம் செய்து கொண்டபின் நடிப்பிலிருந்து ஒதுங்கினாலும், அப்படியே இயக்குனராக மாறிவிட்டார். நடிகை சம்யுக்தா வர்மாவும் நடிகர் பிஜுமேனனை திருமணம் செய்துகொண்ட கையோடு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார்.
மஞ்சுவாரியார் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவர்கள் மூவரும் அவ்வப்போது ஒன்று கூடி அரட்டை அடிக்கவும் தங்களைப் பற்றிய தகவல்களை அப்டேட் செய்து கொள்ளவும் தவறுவதில்லை
அப்படி சமீபத்தில் சம்யுக்தா மேனன், கீது மோகன்தாஸ் இருவரையும் சந்தித்துள்ளார் மஞ்சுவாரியர். மூவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மஞ்சுவாரியர், “எதையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும் எப்போதும் நண்பர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்