ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
பிரமாண்டமாக தான் இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் மிக சரியான ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்து அவற்றை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றினார் இயக்குனர் ராஜமவுலி. அதேசமயம் தற்போது ராம்சரண் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து தான் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர் படத்திற்கு சரியான ரிலீஸ் தேதி அமையாமல் திணறி வருகிறார் ராஜமவுலி.
கொரோனாவின் இரண்டு அலைகள் காரணமாக மற்ற முன்னணி நடிகர்களின் படங்களும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால், இப்போது முன்கூட்டியே முக்கியமான பண்டிகை தேதிகளை புக் செய்து வைத்து விட்டனர். பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் கூட 2022 சங்கராந்தி பண்டிகை ரிலீஸ் என அறிவித்தாகிவிட்டது.
இந்தநிலையில் ராஜமவுலியும் அதே சங்கராந்தி பண்டிகையன்று ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிடலாம் என விரும்புகிறாராம். இதுகுறித்து பிரபாஸிடம் அவர் பேசியதாகவும் ராதே ஷ்யாம் பட வெளியீட்டை மாற்றி வைக்கும்படி அவரிடம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு ராதே ஷ்யாம் பட தயாரிப்பாளரை பொறுத்தவரை நீண்ட நாட்கள் அந்தப்படம் தயாரிப்பில் இருந்ததால் அந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என பிரபாஸ் கைவிரித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.