Advertisement

சிறப்புச்செய்திகள்

ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழகத்தில் செப்டம்பரில் தியேட்டர்கள் திறக்கப்படுமா?

17 ஆக, 2021 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Will-theatres-open-in-September
Advertisement

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஏப்ரல் மாதக் கடைசியில் தமிழகத்தில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. ஏறக்குறைய நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள சினிமா தியேட்டர்களை செப்டம்பர் மாதத்திலாவது திறக்க அனுமதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடம் எழுந்துள்ளது.

நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. மற்ற தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் 50 சதவீத இருக்கைகளுடனும், தெலங்கானாவில் 100 சதவீத இருக்கைகளுடனும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 50 சதவீத இருக்கைகளுடனும் தியேட்டர்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழில் தயாராகியுள்ள பல படங்களின் வேலைகள் முடிந்து தியேட்டர்கள் திறப்பிற்காகக் காத்திருக்கின்றன. மேலும், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகியுள்ள சில பான்-இந்தியா படங்களையும் வெளியிடத் தயாராக உள்ளார்கள். ஆனால், தென்னிந்தியாவிலேயே இன்னும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தாலும், பாலிவுட்டின் முக்கிய வசூல் மாநிலமான மகாராஷ்டிராவிலும் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தாலும் பலரும் தங்களது வெளியீட்டைப் பற்றி முடிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

கேரளாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை. தமிழகத்தில் கட்டுக்குள்தான் இருக்கிறது. இருந்தாலும் தியேட்டர்களைத் திறந்தால் இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் தான் தியேட்டர்களைத் திறக்காமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தியேட்டர்கள் திறக்கப்பட்ட ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் தியேட்டர்களுக்கு வரவில்லையாம். கொரோனாவின் பிடியிலிருந்து மக்கள் முழுவதுமாக மீண்ட பிறகு தான் தியேட்டர்களையும், சினிமா துறையையும் பழையபடி மீட்டெடுக்க முடியும். அதுவரையில் கடும் சிரமங்களுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என திரையுலகினர் மிகவும் வருத்தத்தில் உள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யா ராஜேசின் கவர்ச்சி போட்டோஷூட்ஐஸ்வர்யா ராஜேசின் கவர்ச்சி ... ஆக்ஷன் வேடங்களை விரும்பும் பூஜா ஹெக்டே ஆக்ஷன் வேடங்களை விரும்பும் பூஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap