டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது சர்கார் படம். இந்த படத்தில் அரசு வழங்கும் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
அரசின் திட்டங்களை தவறாக சித்தரிப்பதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு துறையினர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஏற்கனவே உயர்நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் "தணிக்கை முடிந்த பிறகு தான் படம் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது " என்று தீர்பளித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.