ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். அதன்பின் மலையாளம் கன்னடம் என நிறைய படங்களில் நடித்தவர், கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த வருடம் சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமானார். அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு கடந்த வருட இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது
தற்போது குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் மேக்னாராஜ். இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, மகன் பிறந்து ஒன்பது மாதம் ஆகிறது. அதை கொண்டாடும் விதமாக மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார். இதற்கு நஸ்ரியா உள்ளிட்ட அவரது நெருங்கிய தோழிகள் பலரும் வரவேற்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.