தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கொரோனா இரண்டாவது அலை காரணமாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆந்திர அரசு சினிமா படப்பிடிப்புகள் நடத்த தளர்வுகளை அறிவித்திப்பதால் நேற்று முதல் ஐதராபாத்தில் போடப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் ராஜமவுலி.
காலை 7 மணிக்கே மேக்கப் போட்டு விட்டு கேமரா முன்பு வந்திருக்கிறார் ராம்சரண். அதோடு அவர் நடித்து வரும் ஆச்சார்யா படப்பிடிப்பும் தொடங்குவதால் இன்னும் 30 நாட்களுக்கு டபுள் ஷிப் போட்டு இந்த இரண்டு படங்களிலுமே மாறி மாறி நடிக்கும் ராம்சரண், இந்த 30 நாட்களில் ஆர்ஆர்ஆர் படத்திற்கான தனது அனைத்து காட்சிகளிலும் நடித்த முடித்து விடவும் திட்டமிட்டுள்ளாராம்.
கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ராஜமவுலி.




