இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் சமூக சேவை நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
திரையுலகத்தில் உள்ள சோனு சூட், சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்ட நடிகர்கள் சிலர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
'கேஜிஎப் 2, சலார்' ஆகிய படங்களின் தயாரிப்பாளர்களான ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தினர் மாண்டியாவில் 2 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களையும், 20 ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்கள். மேலும் 'சலார்' படக்குழுவினர் 150 பேருக்கு தலா 5000 ரூபாய் வழங்கியுள்ளார்கள். மேலும், தெலுங்கு பிலிம் சேம்பர் உறுப்பினர்கள் 3200 பேருக்காக 35 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இப்படியான உதவிகளைச் செய்து கொடுத்ததாக ஒரு தகவல் கூட இதுவரை வெளிவரவில்லை. பெப்ஸி சங்கத்திற்கு மட்டும் அஜித், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் நிவாரண உதவிகளை அளித்துள்ளனர்.
கடந்த வருடம் முதல் அலை வந்த போது கிடைத்த உதவிகளை விட இந்த முறை உதவிகள் குறைவாகவே கிடைத்துள்ளன. பெப்ஸி சார்பில் 10 நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தும் கூட தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் உதவி செய்ய முன் வராதது ஏன் என்று தெரியவில்லை.




