ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் தியேட்டர்களை முழுவதுமாக மூட உள்ளார்கள். இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என்பதால் இன்றிலிருந்தே தியேட்டர்களை மூடிவிட்டார்கள். அரசு அறிவித்தபடி ஏப்ரல் 30ம் தேதி வரை இந்நிலை நீடிக்குமா அல்லது அதற்கு மேலும் தொடருமா என்பது கொரானோ பரவலைப் பொறுத்தே அமையும்.
கடந்த வருடம் கொரோனா பரவிய போது தியேட்டர்களை மூடிய காரணத்தால், ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்து பல படங்களை வெளியிட்டார்கள். அது போல இந்த வருடமும் நடக்கலாம் என்ற பேச்சு ஏற்கெனவே எழுந்துவிட்டது.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்', த்ரிஷா நடித்துள்ள 'ராங்கி' ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் கூட ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கடந்த வருட தீபாவளிக்கு நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் காரணமாகவே 'நெற்றிக்கண்' படத்தை வெளியிட ஓடிடி தளங்கள் நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
மே மாதத்திலும் தியேட்டர்கள் மூடப்படும் நிலை வந்தால் மேலும் பல புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவே வாய்ப்புள்ளது என்கிறார்கள்.