சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ | காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி |

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 'தலைவி'. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்தும், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
இந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை முழுமையாக மூடச் சொல்லியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அங்கு புதிய படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. 'தலைவி' படத்தை ஹிந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதால் தற்போது ஏப்ரல் 23ம் தேதி மகாராஷ்டிராவில் வெளியிட முடியாது.
தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியிட்டு ஹிந்தி வெளியீட்டைத் தள்ளி வைக்க வேண்டும். அப்படி செய்வார்களா என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே ராணா டகுபட்டி நடித்த 'காடன்' படத்தையும் தமிழ், தெலுங்கில் வெளியிட்டு, ஹிந்தியில் தள்ளி வைத்துவிட்டனர்.
ஒரு வேளை 'தலைவி' படத்தை ஒரே சமயத்தில் வெளியிட முடிவு செய்தால் தமிழ், தெலுங்கில் ஏப்ரல் 23ம் தேதி வெளியாவது சந்தேகம்தான்.




