இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
நடிகர் சூர்யா கடந்த பிப்ரவரி7ம் தேதி அன்று தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தவர், அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக், பிப்ரவரி11-ந்தேதி அன்று சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டதாகவும், வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் தனது டுவிட்டரில், சூர்யாவிற்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாக ஒரு மகிழ்ச்சி செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.