'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

பிரமாண்டமான கதை என்பதை விட, பிரமாதமான கதையில் நடிக்க வேண்டும் என்பது தான் விஜய்யின் எதிர்பார்ப்பாக உள்ளது என்கிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ். மேலும் அவர் கூறுகையில், இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு அதிகமாக உள்ளது. அவரிடத்தில் கதை சொல்லும்போது அதில் ஒரு சின்ன பொறி கிடைத்தாலும் போதும் அதை அப்படியே டெவலப் பண்ணுங்க என்று எனர்ஜி கொடுக்கிறார் விஜய். அப்படித்தான் மாஸ்டர் படம் உருவாவதற்கு முன்பு நடந்தது. அதேபோல்தான் இப்போது நெல்சன் சொன்ன ஒரு கரு பிடித்து விட உடனே ஓகே பண்ணி விட்டார். அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு செல்கிறார்கள் என்று கூறும் லோகேஷ் கனகராஜ், புதிய வரவு இயக்குனர்களிடம் ஏதாவது புதிய விசயங்கள் கிடைக்கும் என்கிற தேடலில் விஜய் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்கிறார்.




