போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா | ஏஆர் ரஹ்மானின் தெலுங்கு 'பெத்தி' பாடல் புதிய சாதனை | பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த முதல் படம் |

அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த்திற்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பினார். அதோடு, உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை எனவும் அறிவித்துவிட்டார். இதை அவரது ரசிகர்கள் சிலர் ஏற்றாலும், பலர் ஏமாற்றத்துடன் தான் உள்ளனர். தற்போது அவர், தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், ரஜினி இல்லத்திற்கு நமோ நாராயண சுவாமிகள் வருகைத் தந்தார். அவரை ரஜினியும், லதாவும் வரவேற்றனர். பின்னர் ரஜினியின் மனதை அமைதிப்படுத்த ஸ்படிக மாலை அணிவித்த நமோ நாராயண சுவாமிகள், சிறிது நேரம் அவருடன் உரையாடி விட்டு சென்றார். இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.




