ராஷ்மிகா, கிரித்தி சனோன் படம் லெஸ்பியன் கதை இல்லை : இயக்குனர் விளக்கம் | ரவீணா டான்டன் தாயார் வீட்டில் 25 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு | சல்மான்கான் அனுப்பிய லீகல் நோட்டீஸ் ; 'காலா ஹிரண்' இயக்குனர் பதிலடி | இளையராஜாவின் பத்து.... தமிழ் திரை இசையின் முத்து... | நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம் | நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி | தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா மாரி செல்வராஜ்? | 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா | ஹிப்ஹாப் ஆதி தயாரித்த “பொருநை” ஆவணப்படம்: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு | 'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் |

கடந்த 1983ம் ஆண்டில் டி.ராஜேந்தர் எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்து வெளியான படம் 'உயிர் உள்ளவரை உஷா' . இதில் சரிதா, கங்கா, நளினி உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தான் டி. ராஜேந்தர், நளினி என இருவரும் முதன்மை நடிகர்களாக அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் இப்படம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படத்தை தெலுங்கு டப்பிங் செய்தனர். பின்னர் ஹிந்தி, கன்னடத்தில் ரீமேக் செய்தனர். தற்போது 43 வருடங்களுக்கு பிறகு உயிர் உள்ளவரை உஷா படத்தை பிப்ரவரி மாதத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த செப்டம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். பணிகள் முடியாததால் இப்போது பிப்ரவரியில் வெளியிடுகின்றனர்.




