திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில் | திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி | ‛கேஜிஎப்-3, சலார்-2' எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல் | தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்! | ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு! | 'ராகதேவன்' உடன் ஒரு ஆனந்தமான, ஆன்மிக பயணம் : கார்த்திக் சுப்பராஜ் | ஹாலிவுட் ஹீ-மேனுக்கு குரல் கொடுக்கும் உன்னி முகுந்தன் | ஆரம்பித்தபோதே நின்றுபோன ராம்சரணின் கனவுப்படம் ; அதற்கு உயிர் கொடுத்த ‛பெத்தி' இயக்குனர் | கேரளா : முதல் நாள் வசூலில் இரண்டாம் இடம் பிடித்த 'த்ரிஷ்யம் 3' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'கருப்பு' |

மாருதி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 9ம் தேதி வெளியான பான் இந்தியா தெலுங்குப் படம் 'தி ராஜா சாப்'. இப்படம் 200 கோடிக்கு அதிகமாக வசூலித்தாலும் வியாபார ரீதியாக தோல்வியைத் தழுவியதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பட்ஜெட்டில் பாதி மட்டுமே தியேட்டர் வசூலில் வந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் படம் வெளியான நான்கு வாரங்களில் பிப்ரவரி 6ம் தேதி ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட உள்ளார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொதுவாக, பான் இந்தியா படங்களை 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவார்கள். ஆனால், 'தி ராஜா சாப்' படத்தை 4 வாரங்களில் வெளியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




