சிறை எனக்கு ஐந்தாம் வீடு போல ; ஜாமினில் விடுதலையான இயக்குனர் விக்ரம் பட் விளக்கம் | ‛கேஜிஎப்' இசையமைப்பாளருக்கு 35 லட்சம் மதிப்புள்ள கோல்டு வாட்ச் பரிசளித்த விஸ்வக் சென் | 'சரஸ்வதி' பட விழாவில் தெலுங்கு இயக்குனருக்கு நன்றி சொல்லி கண்ணீர் விட்ட வரலட்சுமி சரத்குமார் | தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது: இன்று மாலை ஓட்டு எண்ணிக்கை | எங்க வீட்டுப் பிள்ளை, ஆட்டோகிராப், மாமன் - ஞாயிறு திரைப்படங்கள் | கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் |

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கடந்த வருடம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு தற்போது பெல்லாரி சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகி வந்த தி டெவில் திரைப்படம் இன்று (டிசம்பர் 11) வெளியாக இருக்கிறது. இதனையடுத்து சிறையில் இருக்கும் தர்ஷன் தனது மனைவியின் சோசியல் மீடியா பக்கம் மூலமாக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “இந்த செய்தியானது என் இதயத்தில் இருந்து எனது மனைவி விஜி மூலமாக உங்களுக்கு சுமந்து வரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் உங்களைப் பற்றியும் நீங்கள் காட்டும் அன்பு, அக்கறை, களைப்பில்லாத ஆதரவு, இந்த படத்திற்காக நீங்கள் கொடுத்த இடை நிற்காத புரமோஷன் அனைத்தும் குறித்து அவர் என்னிடம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.
உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம். எந்த ஒரு வதந்தியோ, எதிர்மறை செய்திகளோ உங்கள் இதயத்தை அசைத்துப் பார்ப்பதற்கு விட வேண்டாம். நீங்கள் தான் என்னுடைய பலம். என்னுடைய குடும்பம்.. இன்று அதற்கும் மேலே.. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.




