தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ரஜினி நடிப்பில் 'அருணாச்சலம்' என்ற படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. இந்த நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரஜினி நடிக்கும் 173வது படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. குடும்பப்பாங்கான காமெடி கலந்த கதையில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில் சுந்தர்.சி அளித்துள்ள ஒரு பேட்டியில், அருணாச்சலம் படத்தை அடுத்து மீண்டும் ரஜினியை இயக்கப் போகிறீர்கள். இதேபோன்று அன்பே சிவம் படத்தை அடுத்து கமல்ஹாசனையும் இயக்குவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ''கமல்ஹாசனின் சலங்கை ஒலி படத்தை பார்த்த பிறகு தான் சினிமாக்கு வர விரும்பினேன். அதே போல் அவர் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தை பார்த்த பிறகு தான் திரைக்கதை எப்படி எழுத வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.
அப்படி யாரால் சினிமாவுக்கு வந்தேனோ அதே கமல்ஹாசனை வைத்து 'அன்பே சிவம்' என்ற படத்தை இயக்கினேன். இப்போது அவரது தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 173வது படத்தை இயக்குகிறேன். இப்படி மீண்டும் ரஜினி படத்தை இயக்குவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது போன்று மீண்டும் கமலை வைத்து நான் படம் இயக்குவதற்கான வாய்ப்பு அமையலாம். அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது அந்த படத்தையும் மிகச் சிறப்பாக இயக்குவேன் என்று தெரிவித்திருக்கிறார் சுந்தர்.சி. மேலும், ரஜினி 173வது படத்தின் படப்பிடிப்பு 2026 மார்ச்சில் தொடங்கப்பட்டு 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.