தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மதராஸி, காந்தாரா சாப்டர் 1 படங்களுக்கு பிறகு தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ருக்மணி வசந்த். இந்த நிலையில் அவர் தனது இணைய பக்கத்தில் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தனது அடையாளத்தை ஒரு போலி நபர் தவறாக பயன்படுத்துவது குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛ஒரு மொபைல் எண்ணை குறிப்பிட்டு, இந்த எண்ணை பயன்படுத்தும் ஒருவர் என்னைப் போலவே போலியாக பேசி மக்களை தொடர்பு கொண்டு வருகிறார். ஆனால் இந்த மொபைல் எண் என்னுடையது அல்ல. அதனால் அதிலிருந்து என் பெயரை பயன்படுத்தி வரும் அழைப்புகளும் செய்திகளும் போலியானவை. தயவு செய்து யாரும் பதிலளிக்கவோ அல்லது அத்தகைய தகவல் தொடர்புகளை ஈடுபடவோ வேண்டாம். இந்த ஆள் மாறாட்டும் சைபர் கிரைம் கீழ் வருவதால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார் ருக்மணி வசந்த்.