'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

சினிமாவில் வில்லனாக அறிமுகமான ஆனந்தராஜ், 'கவர்மெண்ட் மாப்பிள்ளை' படத்தின் மூலம் ஹீரோவானர். அதன்பிறகும் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் மீண்டும் வில்லனாக நடித்தார். பிறகு காமெடி, வில்லனாக நடித்தார்.
தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு 'மதறாஸ் மாபியா கம்பெனி' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறார். இதில் அவருடன் சம்யுக்தா, தீபா, முனீஸ்காந்த், ராம்ஸ், ஷகிலா, சசிலயா, ஆராத்யா, மஸ்காரா அஸ்மிதா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அண்ணா புரொடக் ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை தயாரிக்கிறார். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
படத்தை இயக்கும் ஏ.எஸ்.முகுந்தன் கூறும்போது, ''வட சென்னையின் மிகப்பெரிய டான் ஆக திகழும் ஆனந்த்ராஜின் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் இலக்குடன் காவல்துறை அதிகாரி சம்யுக்தா களமிறங்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஒரு டானின் வாழ்க்கையையும், அவனது இறுதிகட்ட வாழ்க்கையையும் எதார்த்தமாகவும், அதேவேளை நகைச்சுவையாகவும் சொல்கிறோம்" என்றார்.




