தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

நடிகர் திலகத்தின் வாரிசுகள் பிரபும், ராம்குமாரும். பிரபு சினிமாவில் அறிமுகமாகி 250 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். ஆனால் இன்னொரு வாரிசான ராம்குமார் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை.
ஆரம்பத்தில் நடிப்பு ஆர்வம் இல்லாத ராம்குமார் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார். சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். 1986ம் ஆண்டு 'அறுவடை நாள்' என்ற படத்தை தயாரித்தார், இதனை தற்போது நடிகராக இருக்கும் ஜி.எம்.குமார் இயக்கினார். இதில் பிரபுவும், பல்லவியும் காதலர்களாக நடித்தனர். அவர்களுக்கு உதவும் கிறிஸ்தவ பாதிரியாராக ராம்குமார் நடித்தார்.
படம் வெற்றி பெற்ற போதும் ராம்குமாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றாலும் 'மைடியர் மார்த்தாண்டன்' உள்ளிட்ட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். ரஜினியின் 'சந்திரமுகி' படத்தில் வரும் ஒரு பாடலில் சில வினாடிகள் வந்துபோவார். ஷங்கர் இயக்கிய 'ஐ' படத்தில் வில்லனாக ரீ எண்ட்ரி ஆனார். அதன்பிறகும் பெரிய வாய்ப்புகள் இல்லை. சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தார்.