தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி' ஆகிய படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இதனை இயக்குனர் அட்லியின், 'ஏ பார் ஆப்பிள்' புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தபோது விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதனால் தள்ளிச்சென்ற இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கம் அமைத்து நடத்தியுள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கு இன்னும் கதாநாயகி கிடைக்கவில்லை என்பதால் ஒரு வார படப்பிடிப்பு பிறகு ஒரு மாத இடைவெளியில் விஜய் சேதுபதி மீதமுள்ள பூரி ஜெகநாத் படப்பிடிப்பிற்கு செல்வார் என கூறப்படுகிறது.