ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

நடிகர் திலகம் சிவாஜி அபூர்வமாக சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். திரும்பிப்பார், துளி விஷம், ரங்கோன் ராதா, அந்த நாள், உத்தம புத்திரன் ஆகியவை முக்கியமான படங்கள், அதிகம் அறியப்படாத இன்னொரு படமும் உண்டு அது 'பெண்ணின் பெருமை'.
பெங்காலி எழுத்தாளர் மணிலால் பானர்ஜி எழுதிய 'ஸ்வயம்சித்தா'வை 'அர்தங்கி' என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாக்கினார் புல்லையா. படம் தெலுங்கில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தமிழில் 'பெண்ணின் பெருமை' என்ற பெயரில் இயக்கினார்.
இதில் சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்திரி, நாகையா, எம்.என்.ராஜம், பிரண்ட் ராமசாமி, டி.என்.சிவதாணு உள்ளிட்ட பலர் நடித்தனர். பி.என்.ராவ், ஏ.ராமராவ் இசை அமைத்திருந்தனர்.
ஒரு ஜமீன்தாரின் முதல் தாரத்து மகனான ஜெமினி கணேசனை துன்புறுத்தும் இரண்டாவது தாரத்து மகனாக சிவாஜி நடித்தார். பல வழிகளில் அவரை துன்புறுத்தும் ஸ்டைலிஷான வில்லனாக நடித்திருந்தார்.
முன்பெல்லாம் வில்லன் என்றால் முறுக்கு மீசை, உருட்டும் கண்கள், கத்தி பேசும் வசனம் இதுதான் அடையாளமாக இருந்தது. இதனை முதலில் மாற்றியவர் சிவாஜி, சரித்திர படமான 'உத்தம வில்லனில்' ஸ்டைலிஷான வில்லனாக நடித்தார். சமூக படங்களில் 'பெண்ணின் பெருமை'யில் ஸ்டைலிஷான வில்லனாக நடித்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான முதல் வில்லன் சிவாஜிதான்.




