மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு |

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. லடாக்கில் பல இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் மாதவன் தற்போது லடாக்கில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டிருப்பதாவது: ''லடாக் வரும்போது எல்லாம் இதுபோன்று சிக்கிக் கொள்கிறேன். 2008ம் ஆண்டு படப்பிடிப்பிற்காக இங்கு வந்தபோது பனிப்பொழிவில் சிக்கினேன். 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் லே பகுதியில் சிக்கியுள்ளேன். இங்கு விமானங்கள் இல்லை.
கடந்த நான்கு நாட்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. விமானங்கள் இல்லாததால் என்னால் ஊர் திரும்ப முடியவில்லை. விரைவில் வானம் தெளிவாகும். வீடு வந்து சேருவேன்", என்று குறிப்பிட்டுள்ளார்.