புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

போதைப் பொருளான கோகைன் பயன்படுத்தியது மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக, நடிகர் ஸ்ரீகாந்த், 46, கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாந்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் சில சினிமா பிரபலங்களும் பெயரும் இந்த விஷயத்தில் அடிபடுகிறது. குறிப்பாக கழுகு பட நடிகர் கிருஷ்ணாவும் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இதுதொடர்பாக அவரை விசாரணைக்கு வரச் சொல்லி போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்ததாக சொல்லப்பட்டது. அதேசமயம் அவர் தலைமறைவானதாகவும் தகவல் வெளியாக அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தனது வக்கீல் உடன் போலீஸ் விசாரணைக்கு கிருஷ்ணா ஆஜர் ஆனார். ரகசிய இடத்தில் நடந்த விசாரணையில் அவரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டுள்ளனர். மேலும் அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை கண்டறிய அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.




