தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை நேற்று (ஜூன் 23) நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தார்கள். அவருக்கு தான் கொக்கைன் கொடுத்ததாக பிரதீப் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு நடத்தப்பட்ட ரத்த மாதிரி சோதனையில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரும் தான் செய்த தவறை ஒத்துக் கொண்டதோடு தனக்கு ஜாமின் கேட்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், பிரசாத் என்ற அந்த நபர் நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி நடிகர் கிருஷ்ணாவுக்கும் தான் கொக்கைன் கொடுத்ததாக தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருந்து வரும் நடிகர் கிருஷ்ணாவையும் தொடர்பு கொண்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். மேலும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்பது தெரிகிறது.




