தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்? | 'மைதிலி என்னை காதலி' நடிகர் மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல் | 'கே. சங்கர் 100' : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் | தள்ளிப்போனது டாக்சிக்: அந்த இடைவெளியில் வேறு படங்கள் வருமா? | இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் |

தற்போது எச். வினோத் இயக்கி உள்ள 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ள நடிகர் விஜய், நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு அரசியல், சினிமாத்துறையை சார்ந்தவர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இன்று தனது சமூக வலைதளத்தில் விஜய் ஒரு பதிவு போட்டு உள்ளார்.
அந்த பதிவில், 'எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. அதோடு உலகம் எங்கிலும் இருந்து வாழ்த்து செய்தி அனுப்பிய திரைப்படத்துறை, ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் என் நெஞ்சில் வாழும் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மக்களுக்கான சேவை செய்யும் என்னுடைய பயணத்தில் நீங்கள் அளிக்கும் ஆதரவு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிய இந்த பயணத்தில் நம் அனைவரும் கைகோர்த்து செல்வோம்' என தெரிவித்திருக்கிறார் விஜய்.




