ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மரெட்டி, காட்பாதர் போன்ற படங்களில் நடித்துள்ள நயன்தாரா தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் அவரது 157வது படத்திலும் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சிரஞ்சீவி நடித்த காட்சிகளாக படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியில் நடந்து வருகிறது.
நேற்று முதல் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாராவும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அங்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் கட்சி மற்றும் பல முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். முழு மர்சியல் கதையில் உருவாகும் இந்த படம் 2026 சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது. தற்போது சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள விஸ்வாம்பரா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.




