
சிம்பு எடுத்த முடிவு
ஜூன் 01, 2025
Advertisement
கமலின் தக் லைப் படத்திற்கு பின் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு 49வது படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். சமீபத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருக்கிறார்.
இதனால் இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49 ஆகிய படங்களின் நிலைமை இடியாப்ப சிக்கலில் உள்ளது. டான் பிக்சர்ஸ் தரப்பில் சிம்பு 49 படத்திற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இட்லி கடை, பராசக்தி படத்தை திரைக்கு கொண்டு வாங்க. பிறகுதான் கால்ஷீட் தருவதாக சிம்பு தெரிவித்துள்ளாராம். இதனால் சிம்பு 49 படம் உருவாவதில் தாமதம் ஆகும் என தெரிகிறது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் உடனடியாக சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் இட்லி கடை, பராசக்தி, சிம்பு 49 ஆகிய படங்களின் நிலைமை இடியாப்ப சிக்கலில் உள்ளது. டான் பிக்சர்ஸ் தரப்பில் சிம்பு 49 படத்திற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இட்லி கடை, பராசக்தி படத்தை திரைக்கு கொண்டு வாங்க. பிறகுதான் கால்ஷீட் தருவதாக சிம்பு தெரிவித்துள்ளாராம். இதனால் சிம்பு 49 படம் உருவாவதில் தாமதம் ஆகும் என தெரிகிறது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் உடனடியாக சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!