ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

குறுகிய காலத்தில் பெரும் புகழ்பெற்ற பாடலாசிரியர் நா.முத்துகுமார். ஆயிரக் கணக்கான பாடல்கள், இரண்டு தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள் என சாதனை படைத்தவர். அவரது 50வது பிறந்த நாள் ஜூலை மாதம் வருகிறது. இதை முன்னிட்டு பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது.
அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கிறார்கள். நா.முத்துகுமாரோடு பணியாற்றிய திரை பிரபலங்களும் நண்பர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். நா.முத்துகுமார் வெல்பர் கோர் கமிட்டி மற்றும் ஏசிடிசி நிறுவனம் இணைந்து இதனை நடத்துகிறது. வருகிற ஜூலை மாதம் 5ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.




