‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

உலகம் சுற்றும் வாலிபி என்ற பட்டத்தை நயன்தாராவுக்கு தாராளமாக வழங்கலாம். அடிக்கடி வெளிநாடு செல்வது அவருக்கு பிடித்தமான விஷயம். பல நாடுகளுக்கு அவர் தனியாக காதலனுடன், குழந்தைகளுடன் சென்று வந்துவிட்டார். லேட்டஸ்ட்டாக பாரிஸ் சென்று இருக்கிறார். அந்த போட்டோக்களை வழக்கம்போல் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்.
பொதுவாக, கணவருடன், குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களைதான் அவர் அதிகம் பதிவிடுவார். இந்த போட்டோவில் அவர்கள் மிஸ்சிங் என்பதால் சில நெகட்டிவ் கருத்துக்களை பரப்புகிறார்கள்.
மனதளவிலும் சில மாதங்கள் நயன்தாரா சோகத்தில் இருக்கிறாராம். காரணம் அவர் சினிமாவில் வெற்றி படம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்னணி நடிகர்கள் படங்களிலும் அவரை பார்க்க முடிவதில்லை. பெரும்பாலும் கதையின் நாயகியாகவே நடிக்கிறார். அதனால், இப்போதைக்கு எனக்கு தேவை ஒரு வெற்றி படம். அதற்கேற்ப நல்ல கதை, நல்ல டீம் அமைய வேண்டும். அந்த படத்தை நானே தயாரிக்க ரெடி. உடனடி தேவை வெற்றி என்று தோழிகளிடம் நயன்தாரா பீல் பண்ண வருகிறாராம்.