ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்தவர் மேக்னாராஜ். கன்னட நடிகையான இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமண செய்து கொண்டார். திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.
சிரஞ்சீவி சார்ஜா இறந்த ஓராண்டிலேயே மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி வெளியானது. அப்போது அவர், நான் எப்போதுமே எனது மகனின் எதிர்காலம் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் எனது வாழ்க்கையில் இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
ஆனபோதும் தற்போது அவரது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மேகனா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் மேக்னாராஜ். அதில், தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு நீ மட்டுமே கணவர் என்று பதிவிட்டுள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போது மேக்னா ராஜ் மறுமணம் செய்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி உள்ளது.




