'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் 'புஷ்பா 2' படம் வருகிற 5ம் தேதி வெளியாகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ஆந்திரா, தெலுங்கானாவில் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் 'ஸ்பெஷல் பிரிமியர் ஷோ' என்ற பெயரில் 4ம் தேதி (நாளை இரவு) 9 மணிக்கு முக்கியமான மால் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இந்த ஸ்பெஷல் ஷோவிற்கான கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். அதன்படி அதிகபட்சமாக 1200 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் பிவிஆர் சினிமாஸ் 5ம் தேதி 450 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்கிறது. ஸ்பெஷல் காட்சிக்கான கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்து வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள அம்மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.




