பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். இடையில் தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்த பிரச்னைகளால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தற்போது மீண்டும் முழு மூச்சாக படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் பிரசாந்த் நடித்து வெளிவந்த 'அந்தகன்' திரைப்படம் பிரசாந்தை மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்பியது. இதனால் பிரசாந்த் மீண்டும் உற்சாகமாக உள்ளார்.
தற்போது விஜய்யுடன் இணைந்து ' தி கோட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் பேசியதாவது, " இனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 படங்கள் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். குறிப்பிட்ட இயக்குனர்களுடன் மட்டும் நடிக்காமல் அனைத்து இயக்குனர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் "என பேசியுள்ளார்.




