அதிகபட்ச கட்டணம் 450, கேளிக்கை வரி நீக்கம் : முதல்வருக்கு 10 அம்ச கோரிக்கையை வைத்த திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் | கோல்கட்டாவில் மெட்ரோ ரயிலில் பயணித்த விஷால் | திரிஷ்யம் 3 : முதல் நாள் வசூல் 50 கோடி | திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில் | திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி | ‛கேஜிஎப்-3, சலார்-2' எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல் | தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்! | ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு! | 'ராகதேவன்' உடன் ஒரு ஆனந்தமான, ஆன்மிக பயணம் : கார்த்திக் சுப்பராஜ் | ஹாலிவுட் ஹீ-மேனுக்கு குரல் கொடுக்கும் உன்னி முகுந்தன் |

சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பு பெற்ற படம் 'பேச்சி'. சிறிய முதலீட்டில் அடர்ந்த காட்டுக்குள் எடுக்கப்பட்ட ஹாரர் திரில்லர் படம். வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரித்திருந்தனர். அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார்.
பால சரவணன், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இந்த நிகழ்வில் பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது என்ற தகவலை தயாரிப்பாளர் கோகுல் பினாய் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது "ஆகஸ்ட் 1ம் தேதி திரையிடப்பட்ட 'பேச்சி' சிறப்பு காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதை தாண்டி மாஸாக படம் ரீச் ஆகி உள்ளது. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி. பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறோம், அதற்குப் பிறகு பேச்சி இரண்டாம் பாகம் உருவாகும்" என்றார்.




