சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… |

மலையாள நடிகை பார்வதி தனக்கு ஏற்ற கதைகளையும் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனாலேயே மற்ற நடிகைகளில் இருந்து அவர் விரைவில் வித்தியாசப்பட்டும் தெரிகிறார். சமீபத்தில் மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் கூட அவரது வித்தியாசமான நடிப்பை பறைசாற்றும் விதமாகவே இருந்தது. இதை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் நீங்கள் நடிக்க வராவிட்டால் என்ன செய்திருப்பீர்கள் என்கிற வழக்கமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பலரும் நான் டாக்டராகி இருப்பேன், பிசினஸ் உமன் ஆகி இருப்பேன் என்பது போன்று தான் இதுவரை பதில் சொல்லி பார்த்திருக்கிறோம். ஆனால் இதிலும் வித்தியாசமாக நான் நடிக்க வராவிட்டால் நிச்சயமாக டீக்கடை ஆரம்பித்திருப்பேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் பார்வதி. மேலும் இந்த உலகத்தில் ஒவ்வொரு வேலையும் தனக்கென ஒரு கவுரவத்தை வைத்திருக்கிறது. அதனால் டீக்கடை தொழிலிலும் நிச்சயமாக ஏதாவது சாதித்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.




