'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி |

மிகப்பெரிய வெற்றி பெற்ற 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா : தி ரூல்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடித்து வருகிறார்கள். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் 250 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது “புஷ்பா தி ரூல் படம் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் மூலம் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, சமீபகாலமாக தியேட்டர் வசூல் குறைந்துள்ள சூழ்நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் 'கேஜிஎப் 2' படத்தை விட பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டித் தரும். 'புஷ்பா 2' வெளியாகி தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் பல புதிய சாதனைகளை படைக்கும்” என்கிறார்.




